சென்னை: நியூஸ்18ஊடகம் தொடர்பாக வீடியோ வெளியிட  யூடியூபர்  மாரிதாஸ்க்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க  சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் தொடர்பாக பா.ஜ.க ஆதரவாளர் மாரிதாஸ் யூடியூபில் வீடியோ வெளியிட்டார். அதில், அந்த ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் மீது அந்த நிறுவனத்தின் தலைமையிடம் புகார் கூறியதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் இ-மெயில் செய்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் மாரிதாஸ் கூறிய, அந்த இ-மெயில் போலியானது என்று தெரியவந்தது.  இது தொடர்பாக நியூஸ்18 ஊடகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை யினர்  மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்து,   அவருக்கு போலியான மின்னஞ்சலில் இருந்து பதில் அனுப்பியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  நியூஸ் 18 தரப்பிலும், அதன் ஆசிரியர் குணசேகரன் தரப்பில் தனியாகவும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மாரிதாஸ் ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குணசேகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நியூஸ் 18 தாக்கல் செய்த மனுவில், “மக்களிடையே மதப் பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாரிதாஸ் நியூஸ்18 மீது குற்றம் சாட்டிய வீடியோவை வெளியிட தடை விதித்தும், மற்ற வீடியோக்களையும் உடனே யுடியூபில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.

தடையை எதிர்த்து மாரிதாஸ் தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மாரிதாஸ்க்கு ஆதரவாக  மூத்த  வழக்கறிஞர்கள்,மோகன் பராசரன் மற்றும் சதீஷ் பராசரன் ஆகியோர் வாதாடி னார்.

விசாரணையின்போது, மாரிதாஸ், நியூஸ் 18 சேனலுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வீடியோக்களை அகற்ற மறுப்பதாகவும், இதுவரை  நீதிமன்ற உத்தரவுபடி வீடியோக்களை அகற்றவில்லை என்றும் நியூஸ்18 தரப்பில் சுட்டிக்காட்டபபட்து.

இதையடுத்து, இதுதொடர்பாக நியூஸ்18 ஊடகம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு குறித்து தனி மனுத் தாக்கல் செய்ய கூறிய நீதிபதிகள், மாரிதாஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்க மறுத்து விட்டனர். வழக்கு ஆகஸ்டு 25ந்தேதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மாரிஸ்தாக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர்களான  பராசரனை நியமித்தது  துக்ளக் ஆசிரியர்  எஸ்.குருமூர்த்தி என்று கூறப்படுகிறது.