இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அனபெல் சுப்ரமணியம். தீபக், இயக்குனர் ஏ.எல்.விஜய் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, ஜாங்கிரி மதுமிதா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங், ஜெய்ப்பூரில் நடந்தது. இதன் படப்பிடிப்பில் நடிகை மதுமிதாவேகமாக சமைக்கும் காட்சியில் எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் உடலில் பட்டு, அவர் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது .

வலியால் துடித்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அந்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளாராம் மதுமிதா. படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த விஷயம் படக்குழுவுக்குத் தெரிய வந்திருக்கிறது. காயம்பட்ட இடம் வடுவாக மாறியுள்ளது மதுமிதாவுக்கு. பிறகு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது..