சென்னை:
மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரையும், வெற்றிலைகேணி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரையும் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel