சென்னை:
ஸ்ரோ’வின் ஜி.எஸ்.எல்.வி., மாக் – 3 வகையை சேர்ந்த எல்.வி.எம்.3 – எம்2 ராக்கெட், இங்கிலாந்தை சேர்ந்த ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி, இன்று 12:07மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு, செயற்கைக் கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்துகிறது.