டெல்லி: புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை 52 சதவிகிதம் உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி, இதுவரை டெபாசிட் தொகை ரூ.1450 இருந்த நிலையில், தற்போது ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகையை அதிகரித்துள்ளதாக மத்தியஅரசு  அறிவித்து உள்ளது. இனிமேல் புதிதாக சமையல் எரிவாயு இணைப்பு பெறுபவர்கள் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.2200 செலுத்த வேண்டும்.

மேலும் புதிதாக ஒரு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுவதுடன் கூடுதல் சிலிண்டர் கேஸ் வாங்குபவர்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட  டெபாசிட் தொகை ரூபாய் 2900 ஆக இருந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுவதுடன் கூடுதல் சிலிண்டர் கேஸ் வாங்குபவர்களுக்கு ரூபாய் 4600 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.