சென்னிமலை

டெட்ரா பேக் முறைக்கு மதுபானங்களை மாற்றுவதால் பல பிரச்சினைகள் தீரும் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

இன்று தமிழக மதுவிலக்கு,ம் ஆயத்தீர்வை மற்றும் வீட்டுவச்தித்துறை அமைச்சர் முத்துசாமி சென்னிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

”அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பாட்டில்கள் மூலம் மிக எளிதாகக் கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

மேலும் இவற்றை எடுத்துச் செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.  எனவே இவற்றைத் தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம்.

 இவற்றின் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது, தவிர  2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. தனியாக ஒரு குழு இது குறித்து ஆய்வு செய்து வருகிறது.  விரைவில் அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

எனத் தெரிவித்துள்ளார்.