பாட்னா

லண்டனில் வசிக்கும் புஷ்பம் பிரியா சவுத்ரி என்னும் பெண் தன்னைப் பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டுள்ளார்

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.  இந்தக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  இம்மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இந்த வருடம் நவம்பரில் முடிவடைகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மாநில மேலவை உறுப்பினர் வினோத் சவுத்ரியின் மகள் புஷ்பம் பிரியா சவுத்ரி லண்டனில் வசித்து வருகிறார்.  இவர் நேற்று பீகார் மாநிலத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தித்தாள்களில் ஒரு முழு பக்க விளம்பரம் அளித்துள்ளார்.

அதில் தன்னை பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் முதல்வர் வேட்பாளர் என அவரே அறிவித்துள்ளார்.   அத்துடன் அந்த விளம்பரத்தில் அவரை புளூரல்ஸ் என்னும் கட்சியின் தலைவி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.