சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில்  திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல்  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ளது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராம நாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி  உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.  ஆனால், எந்த தொகுதிகள் என உறுதி செய்யப்படாத நிலையில், இன்று  மார்ச்சிய கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுபோல சிபிஎம் கட்சிக்கு 1024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது தொடர்பாக கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட  மார்க்சிய கம்யூனிஸ்டு,  தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில்  போட்டியிடுகிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது. . இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  அதேப்போல், தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது