கொடைக்கானல்: கொடைக்கானல்  பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் ஆதார் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு வழங்கியுள்ள தளர்வுகள் காரணமாக இன்றுமுதல் 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.  கொடைக்காணல் செல்பவர்களுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  ️கொடைக்கானலில் உள்ளூர் வாசிகள்  பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம் என மாவட்ட  போக்குவரத்து மேலாளர் தெரிவித்து உள்ளார். மேலும் கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதனால், உள்ளூர்வாசிகள் என கூறி ஏமாற்றப்படுவதை தவிர்க்கவே ஆதார் கார்டு கையில் வைத்திருக்க வேண்டும் என போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார்.