சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் மையங்கள் குறித்த பட்டியலை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள கோவாக்சின் தடுப்பூசி மையங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் சென்னையில், 7 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களிலும், கோவையில் 2 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 இடங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களில் தடுப்பூசி போடப்பபடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.