புதுச்சேரி
புதுச்சேரி மற்றும் காரைக்காளில் வரும் 11 ஆம் தேதி அன்று மதுக்கடைகள் மற்றும் பார்கள் முடப்படுகின்றன.
வரும் 11 ஆம் தேதி வள்ளலார் ஜோதி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ்,
”வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து,மதுபானக் கடைகள் கடைகள், கள்ளுக்கடைகள், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுகின்றன
எனவே மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கலால் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”
என உத்தரவிட்டுள்ளார்.