டில்லி,

மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளார்.

2013 ஆண்டு நடைபெற்ற  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.

ஆனால், மேட்ச் பிக்சிங் வழக்கை விசாரித்த டில்லி   நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று ஸ்ரீசாந்த் உள்பட 36 பேரை விடுதலை செய்தது.

ஆனால், பிசிசிஐ தனது மாற்றிக்கொள்ள முடியாது என அறிவித்துவிட்டது. மேலும், குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை.

சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பிசிசிஐ விளக்கம் அளித்தது.

தற்போது லோதா குழுவின் பரிந்துரைப்படி பிசிசிஐ-ன் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நீக்கி, வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ நிர்வகிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய தலைவர்  வினோத் ராய்க்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீதிமன்றத்தால் தன்னுடைய தடை நீக்கப்பட்டபிறகும் பிசிசிஐ தடையை நீக்க மறுத்துவருகிறது.

இதை மாற்றி, தன்னை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதியளிக்கவேண்டும். தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.