லிபியா:

ட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிபியாவில் உள்ள,  திரிபோலிக்கு கிழக்கே காராபுல்லி நகரின் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் இந்த விபத்து  நடந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் இரண்டு  இரண்டு கடலோர காவல்படை கப்பல்கள் விரைந்து, விபத்து காரணமாக தண்ணீரில் சிக்கி தத்தளித்தவர்களை மீட்டது.

விசாரணையின்போது,  ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்து மக்களின்  படகு, அதிக பாரம் காரணமாக விபத்துக்குள்ளானதாக லிபிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 31 பேர் பலியானதாகவும்,  நீரில் தத்தளித்து கொண்டிருந்த மேலும் 200 பேரை அந்நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளனர்.