சென்னை: உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம், சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னையில் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுக்கு எதிராக நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபுவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, இன்று சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டங்கள் நடத்துகிறார் என்று  கூறிய   சேகர்பாபு,  பாதயாத்திரை எடுபடாததால் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என மடைமாற்றுகிறார் அண்ணாமலை; அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மிரட்டல்களை நான் சந்தித்து இருக்கிறேன் . உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். நான், 45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன்; இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்; ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்றார்.

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை என்று அவர் கூறிய அமைச்சர்,  12,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் 71,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது; பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் இந்துசமய அறநிலையத்துறை ஒரு மாறுபட்ட மறுமலர்ச்சியை துரையின் சார்பில் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 28மாதங்களில் பல்வேறு சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக நேற்றைய முன்தினம் 1030 திருக்கோயில்களில் நல்லிக்காட்டுவிழா நடந்து முடிந்துள்ளது. அதில், மக்கள் சாதனையக 2022-23ம், 2023-24ம் ஆகிய 2 ஆண்டுகளில் 930 கட்டணமில்லா திருமணங்களை திருமண்டபம் எடுத்து திருமணத்தை எடுத்து நடத்த வசதியில்லாத இறையன்புகளுக்கு இதுவரை 930 நடந்துள்ளது.

நம்முடைய முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷமான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களில் பூணரமைப்பு பணிகள் மேற்கொள்வ தற்காக 2022-23ம் ஆண்டு 100 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. அதில் 143 திருக்கோயில்கள் பூணரமைப்பு பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 40 கோடி ரூபாய் உபயதார்கள் நிதியோடு 140 கோடி ரூபாய் செலவில் குடமுழக்குக்கான திருபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதே போல 2023-24ம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்கள் மேலும் 1 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்குவதாக அறிவித்து 87 திருக்கோயில்களில் 100 கோடி திருக்கோயில் நிதி, அரசு நிதி, 60 கோடி ரூபாய் உபாயத்தாரர் நிதி என்று 87 திருக்கோயில்கள் 160கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 111பேர் அர்ச்சகர் பயிச்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்கு மனு அளித்துள்ளார்கள் வெகு விரைவில் பயிற்சி பள்ளி தொடங்கும் மொத்தமாக 20 பயிச்சி பள்ளிகள் உள்ளது. அதில் 2 பயிச்சி இந்த ஆட்சி வந்த பிறகு தொடங்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 6 பயிற்சி பள்ளிகள் மூடுவிழா கண்டதை அடுத்து அதை மேம்படுத்தி அந்த பயிற்சி பள்ளிகளையும் தற்போது பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் கோயில்களில் இறைப்பணி செய்யும் அரச்சகர்களுக்கு எந்தவித பிரச்னை வந்தாலும் துறை ரீதியிலான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.