கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. இதனால் ஓடிடி தளங்களுக்கென பிரத்யேகமாக படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தற்போது ஓடிடி தளத்துக்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதில் ஹீரோயினாக நடிக்கும் ஜெனிபர் லாரன்சுக்கு ரூ.186 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர்.

ஆடம் மெக்கே இயக்கி உள்ள இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.