டில்லி

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி 2018ஆம் வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் “வரி செலுத்துவோர்களில் இனும் சிலர் தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.  அவர்கள் வசதிக்காக ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் கடைசி தேதி வரும் 2018ஆம் வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பது பற்றி டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கும் என கூறி இருந்தார்.  அதன்படி அரசு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ஆனால் இந்த அறிவிப்பு பான் எண்ணுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது எனவும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க கொடுக்கப்பட்டிருந்த கடைசி தேதியா பிப்ரவரி 6 ஆம் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது.