டில்லி

ங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆதார் எண்ணை பான் எண்,  போன்றவைகளுடன் இணைக்க மார்ச் 31 வரை அவகாசம் தர உள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தது.   அதன் படி பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுத்த மத்திய அரசு வங்கிக் கணக்குடன் இணப்பதை நீட்டிப்பது பற்றி அறிவிக்க வில்லை.  எனவே வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்கள் அவதியுற்றனர்

தற்போது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இது வங்கியின் வாடிக்கையாளர்கள் பலருக்கு சிறிது நிம்மதியை அளித்துள்ளது.  தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வரும் மார்ச் 31க்குள் ஆதார் எண்ணை இணைக்கப்படாத வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் என தெரிய வந்துள்ளது.