லாகூர்: 

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் மக்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் இடத்தில் இன்றுமதியம் திடீரென குண்டுவெடித்தது.

இதில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவத்துக்கு பிறகு அங்குவந்த போலீசார், விபத்துக்கான காரணங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்னவென்று தகவல் இல்லை. ஆனால் ஜெனரேட்டர்தான் வெடித்ததால்தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த இடம் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருப்பதால் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்ககூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிலமணி நேரம் கழித்து லாகூரிலிருக்கும் குல்பர்க் என்ற இடத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.