சென்னை

திமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக பாஜக முத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தாயாராகி வருகின்றனர். ஏற்கனவே திமுக, அதிமுக கட்சிகள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மற்றும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகின்றன, விரைவில் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் அதிமுக – பாஜக கூட்டணி இடையே, முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் நிறுத்துவோம் என்று இருவரும் கூறி வந்தனர். தற்போது, ஒருவழியாக எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என முடிவுக்கு வந்துள்ளனர்.  , தஞ்சையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி உள்ளார்

அப்போது அவர், “பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது.  ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.

தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடர்ந்து கூட்டணி இருப்பதாக கூறிவிட்டனர்.  பாஜகவில் அதன் பிறகு கலந்துபேசி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எனத் தெளிவாகக் கூறியுள்ளோம். இப்போது நாங்கள் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். விரைவில் நகை எவ்வளவு எனப் பேசி முடிவு செய்வோம். திருமணம்  நல்லபடியாக நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]