குவைத்

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமத் அல் சபா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

இன்று குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா, தனது 86 ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார். குவைத் அரசு இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தனது சகோதரர் மறைவுக்குப் பின் 2020-ல் மன்னராகப் பொறுப்பேற்ற அவர், மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார்.

சென்ற நவம்பரில் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் முன்னேறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் இன்று மரணம் அடைந்துள்ளார்.