ஜ்வரா

லிபியா நாட்டில் நடுக்கடலில் ஒரு படகு கவிழ்ந்து 61 அகதிகள் மரணம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்ல பல புறப்படும் இடங்கள் உள்ளன.  இவற்றில் லிபியா மற்றும் துனீசியா ஆகிய நாடுகள் முக்கியமானவைகளாக  உள்ளன. இவ்விரு நாடுகளில் இருந்தும் 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்கு நடப்பு ஆண்டில் வருகை தந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவிக்கின்றது.

அதே வேளையில் உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகிறது. லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர். அந்தப் படகில் பெண்கள், குழந்தைகள் எனப் பலர் பயணித்து உள்ளனர்.

அந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாமல் தவித்தனர். ஒரு சிலர் மட்டும் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றனர்.  ஆயினும், அகதிகளில் 61 பேர் நீரில் மூழ்கி விட்டனர் என லிபியாவில் உள்ள சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.