anil_kumble_20100405இந்தியா கிரிக்கெட் அணிக்கு அனில் கும்ப்ளே பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பிசிசிஐ இன்று அறிவித்தது.
இந்தியா கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் நியமிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியீட்டு இருந்தது. பயிற்சியாளர் தேர்வு செய்ய பிசிசிஐ டெண்டுல்கர் , கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரை ஏற்று இந்தியா கிரிக்கெட் அணிக்கு அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பிசிசிஐ நியமித்துள்ளது.
பவுலிங், பேட்டிங் மற்றும் உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இவரது  பதவிக்காலம் ஓராண்டுக்கானது. கும்ப்ளேயின் பயிற்சிக்காலம் மேற்கிந்திய தீவுகள் எதிரான இந்திய தொடருடன் தொடங்குகிறது.