பெங்களூர்:

கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சந்தோஷ் மேனன் வீட்டில் காவல்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக பிரிமீயர் லீக் தொடரில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில்,கர்நாடக நீதிமன்றம்,  பெங்களூருவில் வசிக்கும் கர்நாடகா கிரிக்கெட் சங்க நிர்வாகி சந்தோஷ் மேனன் சோதனை நடத்த அனுமதி வழங்கியிருந்தது.

அதையடுத்து, கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த 4ந்தேதி (டிசம்பர்)  மாநில கிரிக்‍கெட் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சுதீந்திர ஷிண்டே  கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சந்தோஷ் மேனன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.