துபாய்: தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீது எழுந்துள்ள ‘சந்தேகத்திற்குரிய நடவடிக்கை’ என்ற புகாரின் மீது பொருத்தமான தீர்வு விரைவில் எட்டப்படும் என்று நம்புவதாக கொல்கத்தா அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சுனில் நரைன் அணியிலிருந்து வெளியேற்றப்படுவாரா? என்பது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை கொல்கத்தா அணி நிர்வாகம்.
சுனில் நரைன் ஏற்கனவே எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கள நடுவர்களால் அவர்மீது மற்றொரு புகார் தெரிவிக்கப்படும் நிலையில், அவர் தற்போதைய ஐபிஎல் தொடரிலிருந்தே தடை செய்யப்படும் நிலை ஏற்படுமென கூறப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து மொத்தம் 115 போட்டிகளில் ஆடியுள்ளார் சுனில் நரைன் மற்றும் கடந்த 2015 முதல் 68 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.