மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிவரும் கொல்கத்தா அணி, ரன்கள் எடுக்க பெரியளவில் சிரமப்பட்டு வருகிறது.

அந்த அணி, 11 ஓவர்கள் கடந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது.

நிதிஷ் ரானா 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஷப்மன் கில் 19 பந்துகளை வீணடித்து, 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 7 பந்துகளில் 6 ரன்களை எடுக்க, கேப்டன் இயன் மோர்கன் ரன்எதுவும் எடுக்காத நிலையில், ரன்அவுட் ஆனார்.

தற்போது, ராகுல் திரிபாதியும், தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர்.

ராஜஸ்தான் சார்பில் முஸ்தபிஸூர் ரகுமான், சேட்டன் சகாரியா மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.