ஷார்ஜா: 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்ட வேண்டிய கொல்கத்தா அணி, 14 ஓவர்களில் வெறும் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அந்த அணியின் துவக்க வீரர் டாம் பேன்டன் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஷப்னம் கில் 34 பந்துகளில் ரன் அவுட்டானது அந்த அணிக்கு பெரிய சரிவாக அமைந்தது.
இயன் மோர்கனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் பங்கு வெறும் 1 ரன். ஆண்ட்ரே ரஸ்ஸல் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடமையை முடித்துக்கொண்டார்.
தற்போது ராகுல் திரிபதியும், பேட் கம்மின்ஸும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஏதேனும் மாயாஜாலம் செய்தால், கொல்த்தா அணி வெல்லும் என்று நம்பலாம்.