பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா மோகன் பகான் அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளுக்கும் கோலடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவை வீணடிக்கப்பட்டதால், முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி முடிந்தது.

அதேசமயம், இரண்டாவது பாதி ஆட்டம் வேறாக இருந்தது. ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் கொல்கத்தாவின் ராய் கிருஷ்ணா கோலடித்தார். அதன்பிறகு, 84வது நிமிடத்தில் அந்த அணியின் மன்விர்சிங் மற்றொரு கோலடித்தார்.

ஆனால், ஈஸ்ட் பெங்கால் அணியால், பதிலுக்கு கோலடிக்க முடியவில்லை. இறுதியில், 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது கொல்கத்தா மோகன் பகான் அணி.