மும்பை:
ந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்று உள்ள அனைத்து வீரர்களும் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குப் பயணித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித் சர்மா பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி அடுத்த இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் இந்த டெஸ்ட் தொடரிலும் துணை கேப்டனாக செயல்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.  மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.