மும்பை:
பிஎல் தொடரில் மும்பை – கொல்கத்தா அணிகள் இடையே நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர், ரகனே ஆகியோர் தலா 43 ரன்கள் அடித்தனர்.

166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி, 17.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் லக்னோ – குஜராத் அணிகள் மோத உள்ளன.