5

டில்லி:
ணையதளத்தில் உலாவுவோர்  அதிகம் பயன்படுத்தும் டோரண்ட் இணையதளம் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளது.
சமீபத்தில் Kickass Torrents எனும் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளம் அமெரிக்க புலனாய்வு அமைப்பால் முடக்கப்பட்டது.  உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஆர்டம் வாலின் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேடுதல் இணையதளமான டோரண்ட் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டு உள்ளது.
கிக்காஸ் டோரண்ட் (Kickass Torreents) இணையதளம் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்தது, இதைத் தொடர்ந்து  அதன் உரிமையாளர் போலந்தில் கைது செய்யப்பட்டார்.  அதிகம்பேர் பார்க்கும் இணையதளங்களில் கிக்காஸ் இணையதளம் 69-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  இது கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது டோரண்ட்ஸ் Torrentz.eu.தினமும் லட்சக்கணக்கானோர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி இணையதளம் மூடப்பட்டுள்ளது.
தற்போது அந்த இணையதளத்தில் எவ்வித லிங்க்கும் (link)  தோன்றுவதில்லை.