ஐதராபாத்
மக்களின் வயிற்றைக் கடவுள் படத்தைக் காட்டி நிரப்ப முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் பூத் கமிட்டி ஊழியர் கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கார்கே,
“பிரதமர் மோடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பணவீக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடே நெருக்கடியில் இருக்கும்போது, பாகிஸ்தான், சீனா என்று சாக்குப் போக்குகளைக் கூறுகிறார்.
கடவுளின் படத்தைக் காட்டி மக்களின் வயிற்றைப் பிரதமர் மோடியால் நிரப்ப முடியாது. மக்கள், பிரதமர் மோடியின் பொறியில் விழ வேண்டாம். ஏற்கனவே பிரதமர் மோடி பல உத்தரவாதங்களை அளித்தார். அவற்றில் எதுவும் அவர் நிறைவேற்றவில்லை”
என்று கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]