புவனேஸ்வர்

காங்கிரஸ் தலைவர் கார்கே பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அரசியல் கோழை என ஜாடையாக விமர்சித்துள்ளார்.

நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை அமைத்து பிறகு அதில் இருந்து விலகி, பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  மேலும் 6 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த தொண்டர்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ,

அமலாக்கத் துறையினர் பயமுறுத்துவதற்காக, அச்சு றுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் நோட்டீசை வழங்குகிறார்கள். சிலர் பயத்தினால், சிலர் அவர்களுடைய நட்புறவை விட்டு விடுகின்றனர்.வேறு  சிலர் கட்சியையும், கூட்டணியையும் விட்டு விடுகின்றனர் .

அத்தகைய கோழை மக்கள் தொடர்ந்து இருக்கும் வரை, இந்த நாடு தப்பி பிழைக்குமா? இந்த அரசியல் சாசனம் தப்பி பிழைக்குமா? ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா? இது உங்களுக்கான வாக்கை நீங்கள் செலுத்துவதற்கான இறுதி வாய்ப்பு உங்களிடம் உள்ளது.  இதற்கு பிற்கு, வாக்களிப்பதே இருக்காது

விரைவில் நடைபெறவுள்ள தேர்தல், ஜனநாயகம் பாதுகாக்கப்பட, மக்களுக்கான கடைசி சந்தர்ப்பம் ஆக இருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்து விட்டால், அதன்பின்னர் சர்வாதிகாரம் அறிவிக்கப்படும். பிறகு ஜனநாயகமோ, தேர்தலோ இருக்காது ”

என்று கூறி உள்ளார்.