டில்லி

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ததையொட்டி மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நிர்மலா சீதாராமன் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. 

மகளிருக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் க டும் ஆட்சேபனை தெரிவித்தார். நேற்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி முன்னிலையில், இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

ம்ல்லிகார்ஜுன பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கே அனைத்து கட்சிகளும் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாகவும், அப்பெண்களால் உறுதியாகச் செயல்பட முடியாது என்றும் கூறினார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் அளித்தார்.

அவர், ”எல்லா கட்சிகளும் உறுதியான பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில்லை என்று கார்கே கூறுவதை ஏற்க முடியாது. எங்கள் கட்சியின் அனைத்து பெண்கள் சார்பில் நான் பேசுகிறேன். எங்களுக்குப் பிரதமர் மோடி அதிகாரம் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒரு அதிகாரம் அளிக்கப்பட்ட பெண். எங்கள் கட்சியின் ஒவ்வொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிகாரம் அளிக்கப்பட்டவர்தான். எனவே, பெண்களை இழிவுபடுத்தக்கூடாது” என்று தனது பதிலில் தெரிவித்தார். .

மல்லிகார்ஜுன கார்கே, ”உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பெண்களுக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

இதற்கும் ஆட்சேபனை தெரிவித்த நிர்மலா சீதாராமன், ”திரௌபதி முர்மு யார்? பெண்களுக்கிடையே பாகுபாடு பார்க்காதீர்கள். அனைத்து பெண்களுக்கும்தான் இட ஒதுக்கீடு கேட்கிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தலையிட்ட பிறகு, கார்கே வேறு பிரச்சினை குறித்துப் பேச ஆரம்பித்தார்.