திருவனந்தபுரம்:

மலேசியாவில் இருந்து பறந்து வந்து வாக்களித்தார் அபுதாபியில் பெரும் பணக்காரராக இருக்கும் யூசுப் அலி.

ரள மாநிலம் நட்டிகாவைச் சேர்ந்தவர் எம்ஏ. யூசுப் அலி. கடந்த 1970-ல் அபுதாபியில் இருந்த தன் மாமாவுடன் சேர்ந்து பிஸினஸ் செய்து வந்தார்.

தற்போது அபுதாபியில் பெரும் பணக்காரராக திகழும் யூசுப் அலி, பல்வேறு நாடுகளில் 5 நட்சத்திர ஓட்டல்களை நடத்தி வருகிறார்.
கேரளாவில் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

மலேசியாவில் முக்கிய வணிகம் சார்ந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனி விமானத்தில் மனைவியுடன் வந்து கேரளாவில் வாக்களித்தார்.