திருவனந்தபுரம்

கேரள மாநில அரசு ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய கேரளா சட்டசபை கூட்டத் தொடரில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ், கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ஐ.யு.எம்.எல்.,  சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ஹமீது இது குறித்து எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்தார்.

அவர் தனது பதிலில்

”ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட இலச்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை. 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்”

என்று கூறியுள்ளார்.