Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

தங்க கடத்தல் வழக்கு: கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரரின்டம் என்ஐஏ மீண்டும் விசாரணை…

Sep 25, 2020

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்க கடத்தலில், முதல்வர் தனிச்செயலாளரான  ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனும் சிக்கியுள்ள நிலையில், அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான  என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஐக்கியஅரபு அமிரகம் பெயரில் வந்த பார்சல்கள் மூலம்  30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான  வழக்கில் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கருக்கும், தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், தங்க கடத்தல் விவகாரம் என்ஐஏ அதிகாரிகள் பலரிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக  சிவசங்கரிடம் ஏற்கனவே 2 முறை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது 3வது முறையாகவும் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் காலை 11.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணபிள்ளை தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக,  கேரள அமைச்சர்  ஜலீலிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Post navigation

வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுகின்றன: பிரதமர் மோடி
மேகாலயா : நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிர் இழந்தார்

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer