திருவனந்தபுரம்

கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரான அச்சுதானத்ந்ன் முன்னாள் கேரள முதல்வர் ஆவார்.  இவருக்கு தற்போது 98 வயது ஆகிறது.   அச்சுதானந்தன் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் திருவனந்தபுரம் நகரில்  வசித்து வருகிறார்.

அச்சுதானந்தனுக்கு திடீர் என உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  அதையொட்டி அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அச்சுதானந்தனுக்கு இரைப்பை, குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  அவருக்குத் தொடர்ந்து இந்த நோய்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.