வயநாடு:
கேரள மாநிலத்தில், நீதிபதியை பாலியல் குற்றவாளி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற நபர், 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக வயநாடு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதிப ஞ்சாபகேசன், ஆறுமுகத்திற்கு 21 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.
தீர்ப்பைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது செருப்பை எடுத்து நீதிபதி மீது வீசினார் .நீதிபதியின்கண்ணில் செருப்புபட்டதால் காயம்ஏற்பட்டது.
இதனால் ஆறுமுகம் மீது புதியவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel