திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரான   ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன்  கைது செய்யப்பட்டு, ஏற்கனவே  7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கேரளாவில் உள்ள ஐக்கியஅரபு எமிரேட் தூதரகம் பெயரில்  பலகோடி மதிப்புள்ள  தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக,  , கேரள அரசின் ஐடிதுறை அதிகாரி ஸ்வப்பான சுரேஷ் உள்பட பலர் சிக்கிய நிலையில், ஸ்வப்பான சுரேஷ்க்கு ஆதரவாக செயல்பட்டதாக, கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சிவசங்கரைவிசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாமல், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அவரது ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில்,  சிவசங்கரனை கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  14 காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரியது. ஆனால்,  கேரள உயர்நீதிமன்றம், சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு  அனுமதி வழங்கியுள்ளது.

அவரது 7 நாள் காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கரனை மேலும் விசாரிக்க வேண்டியது இருப்பதாக அமலாக்கத்துறையில் காவல் நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிவசங்கரனின் காவலை மேலும் 6நாட்கள் நீடித்து, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.