திருவனந்தபுரம்

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

ஒரு பெண் இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்து. 35 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் கேரளாவை மட்டுமின்றி நாட்டையே உலுக்கி உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கேரள மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக நடைபெறுகிறது.

டில்லியில் நடைபெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்த கேரள் முதல்வர் பினராயி விஜயன் கேரளா விரைந்துள்ளார். இந்த  குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.