nazan2கொச்சியில் நேற்று இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் கேரள பிளாஸ்டர்ஸ் – புனே சிட்டி அணிகள் மோதின. போட்டி ஆரம்பித்த 7-ஆவது நிமிடத்திலேயே கேரளா சார்பாக, டக்கென்ஸ் நஸன் கோல் கணக்கைத் துவங்கி வைத்தார். அடுத்து இரண்டாம் பாதியில் 57-ஆவது நிமிடத்தில் கேரளா சார்பாக ஹியூஸ் 2-ஆவது கோலை அடித்தார். எப்படியாவது கோலை சமன் செய்ய வேண்டும் என போராட்டம் நடந்திய புனே இறுதியாக ஒரே ஒரு கோல் மட்டும் தான் அடிக்க முடிந்தது. கடைசி நிமிடத்தில் ரோட்ரிகஸ் புனே சார்பாக கோல் அடித்தார்.

இப்போட்டியின் வெற்றி மூலம் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை தோற்கடித்தது. இதன்மூலம் 5-ஆவது வெற்றியைப் பெற்ற கேரளா 18 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது. 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள புனே 15 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.