கோழிக்கோடு

கேரள மக்களின் அரசியல் அறிவு குறித்து கருத்துக் கணிப்பு சந்தேகம் எழுப்புவதாக பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளி வந்த் வண்ணம் உள்ளன.   இந்த கருத்துக் கணிப்புக்களின் படி பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றன.   அதே நேரத்தில் தென் இந்தியாவில் பாஜகவுக்கு தோல்வி ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு நல்ல ஆதரவு உள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.   இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பது தெளிவாகி உள்ளது.

அதே நேரத்தில் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் கேரள மக்களுக்கு அரசியல் அறிவு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.   இந்த கருத்துக் கணிப்பு முடிவும் வாக்கு எண்ணிக்கை முடிவும் ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு அரசியல் அறிவில் குறைபாடு உள்ளது என்பதை நான் தெரிந்துக் கொள்வேன்” என கூறி உள்ளார்.