ஸ்ரீ ருத்ர கோட்டீஸ்வரர் கோயில் – கீழக் கடம்பூர்
இறைவன் : ருத்ர கோட்டீஸ்வரர்
இறைவி : சவுந்தரநாயகி
புராண பெயர் : கடம்பை இளம்கோயில்
ஊர் : கீழக்கடம்பூர்
மாவட்டம் : கடலூர் , தமிழ்நாடு
தல வரலாறு :
இந்திரன் தன் தவறுகளால் ஏற்பட்ட வினைகளைத் தீர்க்க ஒரு கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்வதாகக் கூறி அதன்படி செய்ய முற்பட்டபோது அவனால் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்ய முடியவில்லை அவன் செய்யும் போது அவைகள் கலந்துவிடுகின்றன . உடனே அவர் ஈசனிடம் வேண்ட அவர் ஒரு கோடி முறை “நமசிவாய ” என்ற பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே ஒரு லிங்கத்தை நிறுவி வழிபாடு என்றார் . அவர் கூறியபடி இந்திரன் இவ் தலத்தில் உள்ள இறைவனை நிறுவினார் .
இங்கு நாயன்மார்கள் வரலாற்றைச் சிறிய சிற்பங்களாக வடித்துள்ளார் . தாராசுரத்தில் உள்ள இரண்டாம் ராஜராஜன் எழுப்பிய கோயிலில் உள்ள நாயன்மார்கள் சிற்பங்களைக் காட்டிலும் இது பழமையானது .
இங்குள்ள சிற்பங்களில் காரைக்கால் அம்மையார் தலைகீழாக கைலாயத்துக்குச் செல்லும் சிற்பம் ,கண்ணப்ப நாயனார் சிற்பம் , சண்டிகேசுவரர் சிற்பம் ,தாடகை என்ற பெண் சிவனடியார் ஈசனை வணக்கம் சிற்பம் ஆகியவை மிகச் சிறப்பானதாகும் .
இக்கோயிலுக்குக் கோபுரம் இல்லை கருவறைக்குத் தனி விமானம் இல்லை . கர்ப்பகிரகம் ஒரு அறையைப் போன்ற அமைப்பில் உள்ளது . அதன் வெளிப்புற அமைப்பில் உள்ள தூண்கள் , கோஷ்டத்தின் அமைப்பு ஆகியவை சோழர்களின் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இக்கோயிலானது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .
கோயிலானது பெரும்பாலும் பூட்டியே இருக்கும் , நாம் பார்க்க வேண்டும் எனில் PH – 9943133058 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தரிசனம் செய்யுங்கள் .
செல்லும் வழி :
இக்கோயிலானது சிதம்பரத்திலிருந்து சுமார் 32 km சென்றால் காட்டுமன்னார்கோவிலை அடையலாம் அங்கிருந்து சுமார் 6 km தொலைவில் எய்யலூர் சாலையில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு அருகிலேயே மேல் கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் செல்லலாம்.