நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் , மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சியிலிருந்து விலகினர்.

இந்நிலையில் இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்துள்ளார் நடிகை கஸ்தூரி .