காலகோட், காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வேலைவாய்பு முகாமுக்கு வெடிகுண்டு எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். பல இடங்களில் நடைபெறும் ராணுவ வேலைவாய்ப்பு முகாம்களில் காஷ்மீர் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று பூன்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் ராணுவ வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொள்ள ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். இவர்களை வாயிலில்சோதனை இட்ட பிறகே முகாம்களின் உள்ளே அனுமதிப்பது வழக்கமாகும்.

அதன்படி சோதனை இட்ட போது ஒரு இளைஞரிடம் இரு வெடிகுண்டுகள் சிக்கி உள்ளன. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் காலகோட் பகுதியை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்பது தெரிய வந்துள்ளது. சுமார் 33 வயதாகும் இந்த இளைஞர் வெடிகுண்டுடன் வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Thanx : AIR twitter