டில்லி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மசோதாவை கிழித்தெறிந்து காஷ்மீர் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் சபைக் காவலர்களால் அவையில் இருந்து  வெளியேற்றப்பட்டனர்.

மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் எம்.பி.க்கள்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தை  2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மத்தியஅரசின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது,   சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து மற்றும்  2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நகல்களை மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமளியில் ஈடுபட்ட வர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அவர்கள் பணியாத நிலையில், அவர்களை சபை காவலர்களால் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். அதையடுத்து, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அவர்கள் வெளியே வந்தனர்.