ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் காங்கிரஸ் பிரமுகர் பலியானார்.

காஷ்மீர் புல்வாமா மாவட்டம் ராஜ்பூரா பகுதியைச் சேர்ந்தவர் குலாம் நபி பட்டேல். காங்கிரஸ் பிரமுகரான இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு புல்வாமா நோக்கி காரில் சென்றார்.

ராஜோரா சாவ் பகுதியில் வந்த போது எதிரே வந்த பயங்கரவாதிகம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குலாம் நபி படேல், பாதுகாப்பு அதிகாரிகள் இம்தியாஸ் அகமது சர்கார், பிலால் அகமது மீர் ஆகியோர் காயமடைந்தனர்.

3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பட்டேல் இறந்தார். இந்த தாக்குதலை காஷ்மீர் முதலவர் மெகபூபா முப்தி கண்டித்துள்ளார்.