சென்னை: தமிழ்நாட்டின்முன்னாள் முதலமைச்சர்  மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது.  இதையடுத்து, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி. நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. ஒரு ரூபத்தில் வாழ்ந்த பல ரூபம் ‘கலைஞர்’ நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன். நீங்கள் கனவு கண்ட கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுகிறோம்” .

“2024-ஆம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவரான கருணாநிதிக்கு நூற்றாண்டு. ஐம்பது ஆண்டுகாலம் திமுகவின் தலைவா், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வா், சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினராகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளாா். திரையுலகத்திலும், நாடக மேடை யிலும் முத்திரை பதித்துள்ளாா். பத்திரிகையை நடத்தியதுடன், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தாா். அவா் தான் இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கினாா்.

வியா்வை சிந்தி இந்த இனத்துக்காக உழைத்ததுடன், ஒரு துளி மையில் இந்த மாநிலத்தை வளா்த்தாா். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக, தமிழ்நாட்டை மாற்றியவா். தமிழ்நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும் அவா் கல்வெட்டு இல்லாத ஊரே இல்லை எனலாம். அவருக்கு, நமது நன்றியின் அடையாளமாக அவரது பெயரிலேயே நூலகம், மருத்துவமனை, ஏறுதழுவுதல் அரங்கம், பேருந்து முனையம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.

அவா் கூறிய படியே, இந்த நாட்டுக்காக என்னை ஒப்படைத்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். Advertisement நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. அந்த நவீன தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயா்த்திக் காட்டி வருகிறோம்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பாா்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில் வளா்ச்சியைக் கண்டு வருகிறோம்.

இவைதான், கருணாநிதி கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாடு. அதை நாங்கள் உருவாக்கிக் காட்டி வருகிறோம். அவா் வகுத்துத் தந்த பாதையில், பயணத்தைத் தொடா்கிறோம். அவரை பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம். உழைப்போம்” என்று கூறியுள்ளார்.

இன்று சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா். இதன்பின், அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள கருணாநிதி சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இது தவிர மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.