பெங்களூரு:

ர்நாடக மாநில விவசாயிகளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அவரது காரை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் குல்பர்கா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அமித்ஷா, தலித் சமுதாய மக்களை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அமித்ஷா சென்ற வாகனத்தை தடுத்து, கருப்பு கொடி காண்பித்து ஆர்பாட்டம் செய்தனர்

பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி பேசினர். அப்போது ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், பேசிக்கொண்டிருந்த ஒரு விவசாயி கையில் இருந்த மைக்கை வலுக்கட்டாயமாக பிடுங்கினார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு இரு இடங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.