பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 7ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு தடை விதித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா அச்சம் காரணமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பொதுத் தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது.  தமிழகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்க அனுமதி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.   கூட்ட முடிவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவித்தார்.

சுரேஷ்குமார், “கர்நாடக அரசு கடந்த ஒரு வாரமாக, கல்வித்துறை நிபுணர்கள், மனநல நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் போன்றோருடன் பள்ளிகளைத் திறப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து ஆலோசனை நடத்தியது.   இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் பாடத்தைக் கவனிப்பது போல் ஆன்லைனில் கற்க முடியாது.  அதைப் போல் மாணவர்களின் திறன், நிலை பற்றி ஆசிரியர்களால் அறிய முடியாது.  அனைத்து மாணவர்களிடமும் ஆன்லைனில் கற்கும் அளவுக்கு வசதிகள் மற்றும் தொழில்நுட்பமோ கிடையாது.

ஆகவே 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடை விதிக்கபப்டுகிறது.  இதனால் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது.   இந்த ஆண்டு கல்விக்கட்டணம் எக்காரணத்தைக் கொண்டு உயர்த்தக் கூடாது.   ஏற்கனவே அறிவித்தபடி வரும் 25 ஆம் தேதி எஸ் எஸ் எல் சி தேர்வுகள் தொடங்கும்” என அறிவித்துள்ளார்.